17
இது கண்ணாத்தாளின் மனதைச் சுட்டது.
"என்னங்க நீங்களும் தொழிலைக்கவனிக்காமல் இப்படியே அலைந்தால் கம்பெனி என்ன ஆகும்?'
"நீ சொல்லுவதும் உண்மைதான்; அதற்காக அதிலேயே மூழ்கிவிட முடியுமா? எனக்கு மட்டும் நான் இதைச் சொல்லிக் கொள்ளவில்லை. உனக்கும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். நீயும் வேலை இல்லாத நேரத்தில் தமிழர் வீடுகளுக்குப் போய்வரலாம்"
"எனக்கு வெளியில் போக ஆசைதான். ஆனல் போய் விட்டு வந்ததும் வீட்டில் தூக்கம் வராமல் நான் தவிக்கிறேன்.”
"அது என்ன அப்படி ஒரு வியாதி?"
"குழந்தைகளைக் கண்டாலே எனக்கு மயக்கம் வந்து விடுகிறது! தலை சுற்றுகிறது; மகாலட்சுமி போல் இருக்கிறாய் பகவான் உனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்காமல் இப்படிச் சோதிக்கிறானே என்று வேறு கேட்கிறார்கள். அது ஒரு பக்கம் என் நெஞ்சைத் துளைக்கிறது".
கண்ணப்பன் சிரித்தான்.
"என்னத்தான் சிரிக்கிறீர்கள்! நான் சொல்லுவது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறதா?"
இல்லை கண்ணா! உன் பேச்சு ஒரு அறிஞனின் தத்துவத்தை எனக்கு நினைவு படுத்துகிறது. ஏழைகளுக்கும் வைரத்திற்கும் ஏன் பகை வந்தது தெரியுமா? ஏழைகளுக்கு அது கிடைக்காததால் அவன் வைரத்தைப் பார்த்துக் கோபப்பட ஆரம்பித்தான் என்று அந்த அறிஞர் கூறியிருக்கிறார்.
இந்த நேரத்தில் வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.
கண்ணாத்தாள் கதவைத் திறந்தாள். தபால்காரன் ஒரு கடிதத்தைப் போட்டு விட்டுப் போனான். அந்தக் கடிதம் கண்ணாத்தாளுக்கு அவள் தகப்பனாா் எழுதியது. "கண்ணா என்ன கடிதம் அது?"