பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25


சம் லேகியம் கொடுப்பார். அப்படியே நாங்கள் ஆறு மாதங்கள் சாப்பிட்டோம்".

பெரிய டாக்டர் புருவத்தை நெறித்தார். பிறகு டாக்டர் கொரியனை நிமிர்ந்து பார்த்தார்.

"மிஸ்டர் கண்ணப்பன், அந்த லேகியம் சாப்பிட்ட பின் உங்கள் உடலில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா?*

"சதை இறுகியது. அது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. உடல் பளபளத்தது. அது எங்களுக்கு ஒரு விதமான உற்சாகத்தை வழங்கியது!"

இதைக் கேட்டதும் பெரிய டாக்டர் உதடுகள் விரிய லேசாகச் சிரித்துக் கொண்டார்.

"என்ன டாக்டர் நீங்களாகச் சிரித்துக் கொள்கிறீர்கள்?' கொரியன் உரிமையோடு கேட்டான்.

"ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே மிஸ்டர் கொரியன்!"

"கண்ணப்பன் லக்கிமேன்! இல்லையா டாக்டர்?"

"நான் அப்படிச் சொல்லவில்லை. அப்படி இருந்தால் நான் ஏன் சிரிக்க வேண்டும்? உங்கள் ரத்தத்திற்கும், இவருடைய ரத்தத்திற்கும் ஒரு சதவிகிதம் கூட வித்தியாசம் இல்லாமல் இருக்கிறதே! கூடப் பிறந்த சகோதரர்களுக்குக் கூட இப்படி ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடியாது!"

இதைக் கேட்டதும் கண்ணப்பனுக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. அவன் மயக்க நிலையை அடைந்து விட்டான்.

"அப்படியானால் இவனுக்கும் புத்திர பாக்கியம் இருக்காது என்கிறீர்கள்! இல்லையா டாக்டர்!*

"ஆம்; இவரும் உன்னைப் போல் இருக்க வேண்டியவர்தான். ஆனால் இவரையாவது எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். இந்த விஷயம் காற்றுவாக்கில் கூட இவர் மனைவிக்கு எட்டிவிடக்கூடாது. இதற்கு மாற்று மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை" பெரிய டாக்டர் ஒரு பெரிய கொலை வழக்கில் தீர்ப்புச் சொல்லுவதைப் போல் அறிவித்தார்,

கோயிலுாா்!

கண்ணப்பனின் தகப்பனார் முத்துக் கருப்பர் நிம்மதியற்றிருந்தார், ஊரார் பேச்சு அவர் நெஞ்சைத்