பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழ்நாட்டில்தான் ஒரு பெண்ணின் வரல்ாறு ஒரு நாவலைப்போல் அமைந்து விடுகிறது. அதுவும் ஒரு அழகான பெண்ணுக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டால் அவளுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன*

திருவனந்தபுரத்தில் சோதனை செய்து பார்த்துவிட்டு வந்தபிறகு கண்ணப்பன் தெம்பில்லாதவனேப்போல் நடந்து கொண்டான். தன் வாழ்க்கையில் ஊடாடிவிட்ட அந்த ரகசியத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறாேம் என்ற மன உளைச்சல் அவனையும் அறியாமலேயே கண்ணப்பனைச் சோர்ந்திடச் செய்தது. மனதிலே ஊறிக் கொண்டிருக்கும் கூச்சத்தை மறப்பதற்காக சில நாட்கள் கண்ணாத்தாளைப் பிரிந்திருக்க விரும்பிய அவன், அவளே ஊருக்கு போய் அவளுடைய பெற்றாேர்களைப் பார்த்துவிட்டு வரும்படி அனுப்பிவைத்தான். அதற்கு அனுகூலமாக கண்ணாத்தாளின் தகப்பனார் உடல் நலமில்லாதிருக்கிறாா் என்று வந்த கடிதத்தைப் பயன்படுத்திக் கொண்டான்.

கண்ணாத்தாள். ஊருக்குப் போய் பதினைந்து நாட்களுக்கு மேலாகி விட்டது. அவளிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. கண்ணப்பன் தனி ஆளாக இருந்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மீன் அவன் உடம்புக்கு ஒத்துவராத ஒரு உணவு. கொச்சியில் மீன் சமைக்காத கடை அரிதாக இருந்தது. அதனல் பெரிதும் துன்பப்பட்டான்.

கண்ணாத்தாள் அவளது தாய் வீட்டில் இத்தனை நாட்கள் தொடர்ந்து இருந்ததே இல்லை. திருமணமான காலத்திலிருந்து ஒரு முறை கூட அவள் சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் எங்கேயும் தங்கியதும் இல்லை.

"பாவம் கண்ணாத்தாள்! எனக்குக் குழந்தையே பிறக்காது என்ற தகவல் அவளுக்குத் தெரிந்தால் அவளும் டாக்டர் கொரியன் மனைவியைப் போலத்தான் முடிவெடுப்பாள்" கண்ணப்பனுக்கு அவன் மனைவியின் அழகின் மீதுள்ள மயக்கத்தைவிட அவளுடைய குணத்தின் மீதுள்ள பற்றுதான் அதிகமாக இருந்தது.