பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



39

பொழுது போகாத நேரங்களில் புத்தகம் படிப்பதைப் போல் அவள் வயலின் வாசித்துக் கொண்டே இருப்பாள்.

ஒருநாள் அவளுக்கு திடீரென்று திருவனந்தபுரத்திலிருந்து ஒரு இண்டர்வியூ வந்தது. மறுநாளே அவள் திருவனந்தபுரத்துக்குப் புறப்பட ஆயத்தமானாள். அவளுடைய அண்ணன் சசிகுமார் சுபத்ராவை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தான். சுபத்ரா பகல் நேரத்தில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தாள். அவள் வந்ததும் வராததுமாக இண்டர்வியூக்குக் கிளம்பினாள். சுபத்ரா, திருவனந்தபுரத்திற்குப் புதியவளாக, வெளியூரே போயிராத வெகுளியாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றினாள்.

“டேவிட்!”