பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

காசியப்பர் எதுவும் பேசாமல் தலையணையில் சாய்ந்தபடி இருந்தார்.

“பாவங்களுக்குத் தண்டனை உண்டென்றால் புண்ணியங்களுக்கும் சக்தி இல்லாமல் போகாது. அந்தப் புண்ணியத்தை நீங்கள் எனக்குச் செய்யுங்கள்.” என்றாள் சுபத்ரா.

“சுபத்ரா, நீ இந்த முரடனிடமிருந்து தப்புவது மிகவும் கஷ்டம். உன் இரத்தத்தை உறிஞ்சிவிட்டுத்தான் இவன் உன்னை விடுவான். என்னால் உனக்கு செய்ய