பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசாக்கிளி சொன்னபோது சின்னக் குழந்தை வைரக்கடுக்கனைத் தண்ணீரில் எறிந்துவிட்டதைப் போல சசி திகைத்துவிட்டான்.

"என்ன தம்பி இப்படி பார்க்கிறே?"

"அவளைத்தான் நான் தேடி வந்தேன்; ஆனால் அவள் பறந்துவிட்டாள். அவள் கெட்டுப்போய் விட்டாளா?"

இதைக் கேட்டு ராசாக்கிளி பலமாகச் சிரித்தான். அது பழைய காலத்துப் பாதுஷாக்களின் சிரிப்பைப்போல சுவர்களில் மோதி எதிரொலித்தது.

"என்னத் தம்பி இப்படிக் கேக்கிறே! கழுதைகள் காணாமல்போன குட்டிச்சுவர்களில் பாக்கணும்; காவடிகள் காணாமல்போனா குன்றக்குடியிலே தேடணும்; அதுமாதிரித்தான் இந்த மாளிகையும். கெட்டுப்போன பெண்கள் இங்கே வருவாங்க இல்லாட்டா கெட்டுப்போக விரும்புற பெண்கள் இங்கே வருவாங்க! இங்கே வந்தீங்கன்ன இரண்டு வகையானவர்களையும் சந்திக்கலாம்.

இதைக் கேட்டதும் சசிக்குத் தலை சுற்றியது.

"சுபத்ரா முறிந்த பாலாகிக் கெட்டுப்போய் விட்டாளாே?"

"இருக்காது; அப்படியானால் அவள் ஏன் இங்கிருந்து ஓடவேண்டும்? நெய்யில் பால் மறைந்து கிடப்பது உண்மையானால் செத்துப்போன பால்தான் நெய்யாகிறது என்பதும் உண்மைதானே! ஆகையால் என் தங்கை நெய்யாவதற்காக ஒடிப்போயிருக்கலாம் அல்லவா?"


இந்த மனப்போராட்டத்துடன் சசி அந்த மாளிகையை விட்டு வெளியேறினான்.

"கண்ணா!"

"அத்தான்"

"இதோ புத்தகம் ஒரு கர்ப்பஸ்திரீக்கு என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. நீ இதைப்படித்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். சில போ் வாழ்க்கை முழுதும்