பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


மற்ற ஏற்பாடுகளெல்லாம் செய்து விட்டீர்களா?

"என்ன ஏற்பாடு?...... ஓ கோ, அதைக் கேட்கிறாயா?"

இருவரும் புதிய தம்பதிகளைப் போல் பேசிக் கொண்டார்கள்.

"ஏன் கண்ணா, நீ உன் விருப்பத்தை எனக்குச் சொல்லவில்லையே!... உனக்குப் பையன் வேண்டுமா, பெண் வேண்டுமா?"

"அடேயப்பா, நினைத்ததைப் பிறக்க வைக்கும் விஞ்ஞானியைப் போல் கேட்கிறீா்களே!"

"உன்னைப் பொருத்த வரையில் நான் ஒரு விஞ்ஞானி தான் கண்ணா! நீ சிரித்துக் கொண்டே வாழ வேண்டும்; நான் அதைக் கண்டு ரசித்துக் கொண்டே பொழுதைப் போக்க வேண்டும். இப்போது நான் இறங்கியிருப்பது அந்த ஆராய்ச்சியில்தான்"

"அத்தான்!"

"உன் உள்ளம் மென்மையானது; மிகவும் நுணுக்கமானது. அதனால்தான் உனது கவலைகளை அகற்ற பின்னலை அவிழ்ப்பது போல நான் நிதானமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்"

"எல்லாம் எனக்காகத்தான் செய்தீர்களாக்கும்! உங்களுக்கும் சேர்த்துத்தானே?’’

"அது என்னவோ உண்மைதான்! ஊரார் முன்னே நானும் தலை நிமிர்ந்து நடப்பேன் அல்லவா!" இப்பவே கோட்டை கட்டாதீர்கள். எல்லாம் மங்களமாக முடியட்டும்!”

"இனி ஒன்றும் பயமில்லை. எல்லாவற்றையும் டாக்டர் கொரியனுக்கு ஒளிவில்லாமல் எழுதி விட்டேன். என்னைப்போலவோ, அல்லது உன்னைப்போல் மூக்கும் விழியுமாகவோ விக்ரகம் போல் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து கொடு என்று எழுதியிருக்கிறேன்'

"தைமாதம் பத்தாம் தேதி வாக்கில் எனக்கு பிரசவமாகலாம் என்று அத்தைக்கு எழுதியிருக்கிறேன். அதை அனுசரித்து நாம் ஏற்பாடு செய்யவேண்டும்"

"குறித்த நேரத்தில் உனக்குப் பிரசவமாகும்; பயப்பட்ாதே!" என்று கொஞ்சலாகச் சொல்லிவிட்டு கண்ணப்பன் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டான்.

அவன் போய்க் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சசிகுமார் வந்தான்.