பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

 எந்த மாமனார் காலத்தில் கண்ணப்பனுக்கு வலிய வலிய வந்து அள்ளி அள்ளி கொடுத்தாரோ, எந்த மாமனார் ஒரு காலத்தில் மகள் கண்ணாவுக்கு வெள்ளியிலும், வெண் கலத்திலும் வண்டி வண்டியாகப் பாத்திரங்களை அனுப்பிவைத்தாரோ அந்த மாமனார் இன்று விடியற் காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சியைப் பல்லில் வைத்துத் தேய்த்துக் கொண்டு முகட்டையே பார்த்துக் கொண்டிருப்பது கண்ணப்பனை வாட்டத்தான் செய்தது.

கண்ணப்பன் குடும்பத்திற்கு மூத்தவன். அவன் தான் தலைமகன். ஒரு குடும்பத்தில் மூத்தவனுக்கே குழப்பம்