இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. பெண்மையின் தாகம்
இன்றுதான் ரேவதியை நேருக்குநேர் பார்க்கிறான், ஞானசீலன்.
அவர்கள் பிரிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
ரேவதியை வேடிக்கை பார்ப்பது போலவும் பார்த்தான், அவன்.
"நீங்கள் திடுதிப்னு தீவிரமான யோசனையிலே மூழ்கிப் போனதினாலேதான், நானும் வெறுமனே இருந்தேன்!” என்றான்.
“யோசனைக்கு என்ன குறைச்சல்? காரியம் கைகூட வேணுமே?" ரேவதி விரக்தியுடன் பேசினாள்.
"நீங்கள் ஒரு காரியத்தை நினைச்சு, அது கை கூடாமல் தப்பிப் போயிட முடியுங்களா?’’
"உங்கள் நல்ல வாக்கு நல்ல தனமாகப் பலிச்சால் சரிதானுங்க!”
"அது கிடக்கட்டும். பேட்டிக்கு நான்தான் தாம தமா வந்துவிட்டேன்.”
"நீங்கள் வர்றதுக்கு ஒரு மாத்திரைப் பொழுது தாமதிச்சிருந்தால்கூட, இந்நேரம் நான் 'லேட் ரேவதி’ யாகத்தான் ஆகியிருப்பேன்!"
"என்ன சொல்றீங்க, நீங்க?"