பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

.

கனவிலே கண்டமாதிரியே நேரிலேயும் கண்டதும், என்னையும் அறியாமலும், என்னையும் மீறிக்கிட்டும் மனம் கும்மாளம் போடவே, பழைய ஞாபகத்திலே என்னவோ சொன்னேன். அது மெய்யாகவே நல்ல ஜோக்காகவும் அமைஞ்சிபோச்சு!’ சோகமாக விடை சொன்னாள், ரேவதி.

‘அட பாவமே!’’

அட புண்ணியமே!’’

ரேவதி...!’

நான் வெறும் ரேவதி கிடையாது. நான் ரேவதி. ஞானசீலனாக்கும்!” மின்னித் தெறித்த தன்னம்பிக்கையின் பெருமிதத்தோடு சொல்லிவிட்டுக் கண்களை அவளுக்கே கைவந்த உயர்வான மனப்பாங்கோடு உயர்த்தி ஞானசீலனை ஊடுருவிப் பார்த்தாள், ரேவதி.

கொலை வெறி கொண்டவனைப்போல சிரித்தார். ஞானசீலன். ரேவதி என்று கூப்பிட்டார். ரேவதி, இந்தப் பிறவியில் நீங்கள் ரேவதி ஞானசீலனாக ஒரு நாளும் ஆகமுடியூாது; ஆகவே முடியாது!’ என்று தீர்ப்புக் கூறினார்.

ரேவதி உருக்குலைந்தாள். நெஞ்செலும்பில் தூண்டில்முள் செருகிக்கொண்ட மாதிரி, அவள் துடித்தாள்; இரத்தமும் துடித்தது. அந்தத் துடிப்பில் அவளுடையதும் அவளுக்கே உரித்தானதுமான அந்த உயர்வு மனப்பான்மைத் தன்மையும் துடிதுடித்ததோ, என்னவோ? நான்...நான் பாரத சமுதாயத்தைச் சேர்ந்த சராசரிப் பெண் ரேவதி!...என்னோட பெண்மை பூரணத்வம் அடைஞ்சிட வேண்டாமா? எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கணும்னா, நான் ஞானசீலனோட உடன்பாடு. செஞ்சுதான் தீரவேணும்!--இது என் சொந்த விஷயம்; இது என் பந்தப்பிரச்னை!..ஓ... ஞானசீலன் திரும்பி விட்டார் அல்லவா?...பேஷ்!