இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93
என் மானத்தையும் மரியாதையையும் காப்பாத்துங்க, அத்தான்!” என்று கெஞ்சி அலறிக் கதறினாள், அவள்!
ஞானசீலனிடம் ஆத்திரத்தி அடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது.
மிஸ் ரேவதி!...”
“அத்தான், நான் ரேவதி ஞானசீலன்!...நான் ரேவதி ஞானசீலன், அத்தான்!”
சோகம், காட்டுத்தீயாகிவிடுமோ!
‘உங்களுடைய அத்தான் ஞானசீலன்...மிஸ்டர் ஞானசீலன் செத்துப்போய் ஆண்டு பத்து ஒடிப் போயிடுச்சு, மிஸ் ரேவதி!...”
‘ஐயையோ... அப்படிச் சொல்லாதீங்க! உங்கள் வாயிலே இன்னொரு தக்கம் அபசகுனமாட்டம் அப்படியெல்லாம் சொல்லிப்பிடாதீங்க! உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்குங்க!’ என்று ஒலமிட்டுக் கதறிய ரேவதி, கழுத்தில் எதையோ தேடினாள்; காணாமல் திடுக்கிட்டாள்.