பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


ஞானசீலன் கைகளை உதறிக் கொண்டே நகர்ந்தார். சிரித்தார். ஞானசீலனுக்கு என்று இப்படி ஒரு மாயச்சிரிப்பா?

காதுகளைப் பொத்திக் கொண்டு, ஞானசீலனுக்கு நேர் எதிரிலே வந்து நிற்கிறாள் ரேவதி. இனியும் அப்படிச் சிரிக்காதீங்க, ஞானசீலன்’ என்று கத்தினாள்.

நான் எப்படிச் சிரிக்காமல் இருக்க முடியும், ரேவதி? இப்படி நீங்கள் அழுது கதறுவதைக் கேட்கவும் பார்க்கவும் தானே நான் இந்தப் பத்து ஆண்டு காலமாகத் தவம் கிடந்தேன்

உங்கள் தவத்தைப் பலிக்கச் செஞ்சிட்டேன்தானே, நான்?’’

‘சந்தேகம் என்ன?”

சிரிப்பு இன்னமும் கொட்டி முழக்கியது.

‘அப்படியானால் என் தவத்தைப் பலிதமடையச் செஞ்சிட வேண்டியது உங்கள் கடமை இல்லீங்களா, மிஸ்டர் ஞானசீலன்?’’


பிரமாதமா விவாதிக்கிறீங்க, டாக்டர் ரேவதி!’

‘நீங்கள் கிளியானால், மறுதரமும் படிச்சுக் கொடுக்கிறேன். இப்போது உங்கள்கிட்டே விவாதம் பண்றது டாக்டர் ரேவதி இல்லே... ரேவதி ஞானசீலன்!”

‘நீங்கள் உங்கள் பேரோட ஒட்டி உறவாட வச்சிருக்கிற அந்த ஞானசீலன்...”

“இதோ, என் கண் முன்னாலே நிதர்சனமா நிற்கிறார். ஞானசீலனுக்கு ஆயுசு நூறு!’ -

பாவமே, ஞானசீலன்! அவனுக்கு அற்ப ஆயுசு தான்... எமன் ஏமாந்தால் அவனுக்கு நீங்கள் கோட்டை கட்டுறாப்பிலே, ஒருவேளை நூறு வயசு எழுதிப் போடலாம்!”