பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


போட்ட என்னை விவாகரத்து செஞ்சிட்ட பாவம் மகத்தான குற்றம் இல்லையா?”

“பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டு உங்களுக்கு எழுதி வச்ச கடிதம் எல்லாம், உங்கள் முகவரி தெரியாததாலே, இன்று வரையிலும் என்கூடவே தங்கிப் போச்சு. இந்தா பாருங்க!”

பழுப்பேறிய கடிதங்களை ஞானசீலனிடம் காட்டினாள்.

“எல்லாத்துக்கும் நிவர்த்தி செஞ்சிடத்தான், உங்கள் பாதாரவிந்தங்களிலே தன்னை மறுபடியும் காணிக்கை வச்சிட்டாளே உங்கள் ரேவதி.”

“என் ரேவதி...!”

“ஊம், உங்கள் ரேவதி என்ன ஆனாள்?... அவளைச் சாகடிக்கிற புண்ணியத்தையும் கட்டிக்கிடப் போறீங்களா? அப்படின்னா, நம்ம முதலிரவிலே என் கையிலே செஞ்சி தந்த சத்தியம் என்னாகிறதாம்? உங்கள் வாழ்நாள் பரியந்தம் இந்த ரேவதி ஒருத்தியே தான் கடைசி வரைக்கும் உங்கள் நெஞ்சுக் கோயிலிலே கொலு வீற்றிருப்பான்னு நீங்கள் சொன்னதெல்லாம் பொய்தானா?”

“என் சத்தியமும் பொய் இல்லே; என்னோட அந்த ரேவதியும் பொய் ஆகமாட்டாள்!... ஆனால், இந்த ரேவதிதான் பொய் ஆகிட்டாங்க! அதாலேதான், இந்த ரேவதி மறுமணம் செஞ்சிக்கிடத் துணிந்து ஒரு சுயம் வரத்துக்கும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க!”

“இந்தப் பழி ரொம்பவும் பாவமானதுங்க, ஞானசீலன்! என் அந்தரங்கமான மனசைப் பகிரங்கமாகச் சோதனை செஞ்சு பார்க்கிறதுக்காக என் மனசாட்சி நடத்தின அக்கினிப் பரீட்சைதான் இப்படிப்பட்ட ‘மணமகன் தேவை’ நாடகம்! அன்றைக்கு நீங்கள் ராசாங்கம் நடத்தின என் நெஞ்சிலே இன்றைக்கும் நீங்களேதான்

அ. மோ-7 -