பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


ஆட்சி பண்றீங்க... என்னோட மனச்சாட்சியே நீங்கள் தான்னு எனக்கு அடிக்கடி எச்சரிக்கை செஞ்சு அனாமதேயக் கடிதங்களை அனுப்பிக்கிட்டிருந்த நீங்கள், என் மனசாட்சியை சோதிச்சும் பார்க்கிறீங்களா?... உடலாலே நீங்கள் கேடு கெட்டுப் போயிருந்தாலும்கூட, உள்ளத்தாலே எனக்கு மாத்திரம் சொந்தமும் பந்தமும் உறவும் உரிமையும் கொண்ட நீங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு தெய்வமாக என் இதயத்தில் குடியிருக்காமல் போனாலும், கண்ணுக்குத் தெரிஞ்ச ஒரு மனிதனாகக் கொலு இருக்கிற என்னோட பழைய ஞானசீலனைப் பார்க்கிறீங்களா?... இப்பவே என் நெஞ்சைத் திறந்து காண்பிப்பேனுங்க, அத்தான்!” வைராக்கியமான ரோஷம் பீறிடச் சவால் விட்டாள் அவள்.

“ரே...வ...தி!”

“இன்னுமா உங்களுக்கு நல்ல புத்தி திரும்பல்லே, அத்தான்?...ஆத்தாளே, கருமாரி! நீயே சொல்; நீயே சொல்லிக் கொடு!...அத்தான், நான் வெறும் ரேவதி இல்லேங்க. நான் ரேவதி ஞானசீலனுங்க, அத்தானே!... உங்கள் தீர்ப்பைத் திருத்தி எழுதி வாசிங்க, என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக அங்கீகரிச்சு, உங்கள் வாயாலே என்னை ‘ரேவதி ஞானசீலன்’ அப்படின்னு ஒரு வாட்டி, ஒரேயொரு வாட்டியாச்சும் அழையுங்க, அத்தான்!”

கண்ணிர் வெள்ளம் கரை புரண்டது.

“பரிசுத்தமான என்னோட இதயத்திலே மாயத் தேவதையாட்டம் கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கிற அந்த ரேவதியைத்தான் என்னாலே ரேவதி ஞானசீலன்னு ஏற்றுக்கிடமுடியும்! ” சிரிப்பின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.

“அப்படின்னா, என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக ஏற்றுக்கிட முடியாதுங்களா?”