பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


இரண்டுக்கு மூன்று வாயாக சுவைத்துச் சுவைத்துப் பருகினாள்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியிருந்த டாக்டர் சத்தியன் டாக்டர் ரேவதிக்கு அளித்த பரிசு அது. சத்தியன் தங்கமானவர்; இருதய நோய் அறுவைச் சிகிச்சை நிபுணரும் கூட. இதயம் உள்ள ‘ஸ்பெஷலிஸ்டு’ மனிதர். காலையிலேயே காந்தி நகரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகச் சொல்லியிருந்தார்; வாக்குத் தவற மாட்டார்!

செக்கச் சிவந்த உதடுகள் மறுபடி ஈரம் ஆயின.

விழிகள் மேலும் சொக்கின.

மேனி சிலிர்த்திட மெய்மறந்தாள் ரேவதி. அவள் சுதந்திரம் அப்படித்தான்!

'பிப்ரவரி நாலு'. அவள் மனச்சாட்சி தேதியை சுட்டிக் காண்பித்தது. மூடித் திறந்த கண்களில் காதல் சுயம்வரம் நடந்து காட்டியது; நடித்துக் காட்டியது.

பத்திரிகையில் ‘மணமகன் தேவை’ விளம்பரத்தை கொடுத்தாலும் கொடுத்தாள். இறுதித் தேதி முடிவதற்குள் ஏகப்பட்ட விண்ணப்பங்கள்; கோப்புக் கொள்ளாமல் நிரம்பி வழிந்துவிட்டன! சோதனைதான்! அவள் சோதிக்காத சோதனைகளா?... சோதனை இப்போது யாருக்காம்? அவளுக்கா? அவள் மனத்திற்கா? அல்லது, அவள் மனச்சாட்சிக்கா?

“பிப்ரவரி நாலில் வெறும் ரேவதியான நான் திருமதி ரேவதி ஆகி விடுவேன்!... ஆ... அம்மா...”

துடித்தாள் ரேவதி. நெ(ரு)ஞ்சி முள் குத்தியிருக்குமோ?!