பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

முகத்தில் ஓர் அலட்சியம் படர்ந்தது. முகக் குறிப்பில், எதையும் தாங்கும் மனப்பக்குவம் அவள் சார்பில் குறி சொல்லியிருக்க வேண்டும்!

விரல்களிலே திடீரென்று ஈரம் பரவ, நிமிர்ந்து அமரலானாள். இமை விளிம்புகளை தொட்டுப் பார்த்தவள், திடுக்கிட்டாள். “நான் அழுதேனா?”-ஈரம் உலர அரை வினாடி போதும்!

‘மாருதி’ அதற்குள் சைதாப்பேட்டையைத் தாண்டி விட்டது.

உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தியபடி கைப்பெட்டியில் ஒரு கையைச் சாய்த்துக் கொண்டு, கால்களைச் சரளமாக நீட்டி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள், அவள்.

என்ன இரைச்சல்?

குழந்தை வீறிட்டு அழுகிறதே!

பதைப்புடன் சுற்றி நோக்கினாள், ரேவதி.

கண்ணாடிச் சிறையில் சூனியம்தான் கைகொட்டிச் சிரித்தது.

உந்திக் கமலத்தில் விம்மல் வெடித்தது.

அவள்-ரேவதி-செல்வி ரேவதி தனது வயிற்றை, அடி வயிற்றைத் தன்னை மறந்த நிலையில், தன்னை மீறிய நிலையில் தடவிக் கொண்டாள்.

“உங்கள் கிட்ட எத்தனை முறை கெஞ்சிக் கூத்தாடினேன்? நீங்கள் கேட்கல்லே. மோக வெறி கொண்டு, வாயும் வயிறுமாக இருந்த என்னைப் பட்டப் பகலில் கட்டாயப்படுத்த, வைத்தியம் படித்ததாலே நானும் வலுக்கட்டாயமாக உங்கள் கிட்டேயிருந்து தப்பிச்சேன். அதுக்காக என்னை- “தேவதை”, “தேவதை”ன்னு வாயாரப் புகழ்ந்த என்னை-எப்படி உதைச்சுத் தள்ளி விட்டு ஓடிட்டீங்க? கடைசியிலே என்ன நடந்தது. ஆமா...