பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


அவ்வளவு தான்.

அவள் பொறுமையை இழக்க வேண்டியவள் ஆனாள். ஆனாலும், ஒலி வாங்கிக் கருவியைப் பொறுமையோடு ஏந்தி நின்றாள். பிறகும் எதிர் தரப்பில் ஓசை எதுவும் கேட்காமல் போகவே, கருவியை ஓசையில்லாமல் வைத்தாள்.

அரைக்கணம் அப்படியே மலைத்து நின்றாள். “அலோ... அலோ...” என்று சுருதி பேதத்துடன் ஒலித்த அந்தக் குரல், திரும்பத் திரும்ப அவளது மன அடிவாரத்தில், இனம் காட்டி எதிரொலித்தது!

“வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிடுச்சுப் போலே! அதுதான், இப்படியெல்லாம் நாடகம் ஆடுறார். எழுபத்தெட்டு ஜனவரியிலே பிடிச்ச கிறுக்கு இப்ப எண்பத்தெட்டு ஜனவரியிலே மறுபடி தொடங்கியிருக்கு போலிருக்கு. ஆனானப்பட்ட இந்த ரேவதிப் பொண்ணை இன்னமும் கூட கொக்குன்னு பழைய கொங்கணவா, நீ நினைச்சிருந்தால், அந்தத் தப்பிதத்துக்கு நானும் பொறுப்பாளி ஆக முடியாது; விதின்னு கதைக்கிற ஏதோ ஒரு மாய சக்தியும் பொறுப்பு ஆக மாட்டாது!” சிரித்தாள். டாக்டர் ரேவதி.

பட்டணத்தில் எம். பி. பி. எஸ். படித்துப் பட்டமும் பெற்ற பின், புதுக்கோட்டையில் ராணி மருத்துவமனையில் உதவியாளராகப் பொறுப்பேற்ற அன்று மாலை நேரத்தில் பல்லவன் குளப் பகுதியிலிருந்த சாந்தநாதர் ஆலயத்திற்குச் சென்றாள், ரேவதி. அர்ச்சனை செய்தாள். பெண்கள் வரிசையிலிருந்த சுவாமியைக் கும்பிட்டாள், அப்போது, எதிர்ப்புறத்தில் இருந்த ஆண்களின் கூட்டத்திலிருந்து ஞானசீலன், வழக்கம் போலவே - அப்போதும் “வணக்கம்” சொன்னதைக் கேட்டதும், கண்டதும், அவளும் வழக்கம் போலவே. பதில் வணக்கம் தெரிவித்துப் புன்னகை செய்தாள்.

தீபாராதனை நடந்தது; முடிந்தது.