பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. அந்தக் கொடியிடையில்...


சுகத்திற்கு என்று ஒரு மனமா?

சோகத்திற்கு என இன்னொரு மனம் வேண்டுமோ?

வேடிக்கையான மனம்!

வேடிக்கையான வாழ்க்கை !

நல்ல மன நிலை மாறுமுன் அவள் சுழற் நாற்காலியில் இருந்து எழுந்து விட்டாள். காதல் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்ந்திருந்த விண்ணப்பங்கள், புகைப்படங்கள் அடங்கிய கோப்பு அப்பால் நகர்ந்து கொண்டது. சிதறிக் கிடந்த நிழற்படங்களும் இருட்டை நிழலாக்கி இளைப்பாறின.

செயலாளர் ராவ் மேலே வந்து விட்டால், புதிய தகவல்களைச் சொல்லக் கூடும்! வரட்டும்!

பூச்சிதறலாக சாதி முல்லை மணக்கிறது.

அடடே... இன்னொரு டாக்டர் ரேவதியும் அதோ சிரிக்கிறாளே!

கச்சிதம்.

திலகம் அபாரம்.

பதக்கம் மின்னுகிறது.

போதும், போதும்!... கண் பட்டு விடப் போகிறது!

யார் கண்ணாம்?

அந்த இரகசியத்தை பிப்ரவரி நான்கு சொல்லிவிடும்.