பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. பாரிஸ் இன்ப இரவுகள்


‘ராஜகுமாரி' கொட்டகையில் எக்கச்சக்கமான கூட்டம்.

ரேவதி ஒற்றை ரோஜாச் செடியாக சற்றே ஒதுங்கி நின்றாள்.

ஒர் ஆட்டம் முடிந்து, இன்னோர் ஆட்டம் தொடங்க இருந்த நேரமானதால், சத்தங்களே மனித விதியாகி ஆர்ப்பாட்டம் நடத்தவே, அவளுக்கு எரிச்சல் எகிச்சலாக வந்தது.

கூட்டத்திலே தலைமுறையின் இடைவெளியைக் கண் கூடாகப் பார்த்ததும், அவளுக்கு வியப்பு மேலிட்டது. கட்டத்தினரில் இளைய தலைமுறையினரை விடவும் முற்றிப் பழுத்து முதிர்ந்தவர்களே கூடுதலாகக் காணப்பட்டனர்! வயதான கட்டைகளுக்கு செக்ஸ் என்கிற இனக்கவர்ச்சியில் இ த் த ைன மயக்கமா! அவள் திகைத்தாள்.

அவள் கேள்வியே அவளைச் சுட்டிருக்கலாம். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி படித்துக் கொள்வ தற்குப் பால் உணர்வு ஒர் ஆர்வத் தூண்டுதலாகப் பயன்பட்டால், வாழ்க்கை வாழ்வதற்காக அமையும்:-இவ்வகையில் 'பாரிஸ் இன்ப இரவுகள்' பயனுள்ளதுதான்!

"குட் சவினிங் டாக்டர்"