பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


ஓ... குமாரி குழலி!... நல்லா இருக்கியாம்மா?...”

"உங்கள் புண்ணியத்திலே, நல்லாவே இருக்கேன், டாக்டரம்மா!" வெள்ளைத் தாவணி இயற்கை தாய்க்கு வெண்சாமரம் வீசியதோ?

"படம் பார்க்க வந்தியா?”

"இல்லே... இல்லே. பக்கத்துத் தெருவிலே என் தோழி ஒருத்தியைப் பார்த்துட்டுத் திரும்பினேன். உங்களை மாதிரி தெரிஞ்சுது; அதான் ஒடியாந்தேன்..."

"மிகவும் மகிழ்ச்சி, குழவி!" பாசம் கரைபுரளப் பேசினாள், ரேவதி.

கண்களுக்குள்ளே நின்றவளை நேரிடையாக மீண்டும் பார்த்த களிப்பு, அவளுக்கு ஆறுதலை அளித்தது. குழவியை அப்படியே விழுங்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பதென்று தீர்மானம் செய்து கொண்டவளைப் போல, தொடுத்த கண் எடுக்காமல், ஆழமாகவும், அன்பாகவும் பார்த்தாள். அந்தப் பார்வை அவளுக்கு எத்துணை ஆறுதலையும் தேறுதலையும் தருகிறது!

யாரோ தும்முகிறார்கள்!

“ஒரு நிமிடம் நிற்கிறாயா, குழலி: ஒரு நிமிடத்திலே வண்டியை எடுத்துக்கிட்டு வந்திடறேன்" என்று கூறி நகர்ந்தாள், ரேவதி.

மறுகணத்தில், தன் தோளைத் தொட்டு யாரோ உலுக்குவதை உணர்ந்து தி கி லு - ன் முதுகைத் திருப்பினாள்.

அங்கே... விதியின் கைப்பாவையென நின்றாள், மந்தாகினி. "உங்கள் ஆணவத்துக்கு நான் ஒன்றும் குறைந்தவள் இல்லை" என்று சொல்லாமல் சொல்வதைப் போன்று அவள் காணப்பட்டாள்.