பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

"அப்படியா?...” ஆச்சரியக்குறியை ஏந்தினாள் ஏந்திழையாள். "குழலி! இனிமேல் நீ என்னை 'டாக்டர்’னு வெறுமனே கூப்பிட்டால் போதும்; 'அம்மா' பட்டம் சூட்ட வேணாம்."

"அதுவும் சரிதான் டாக்டர்!"

"நீ படுசமர்த்து!"

"ஞானசீலன் அண்ணனும் இப்படித்தான் பாராட்டுவார்.’’

"அண்ணன், அண்ணன்னு உயிரையே விடுறியே, குழலி!...” -

"உண்மைதாங்க... என்னோட அண்ணனுக்காக உயிரை விடவும் சித்தமாய் இருக்கேனுங்க, டாக்டர். அவர்- மிஸ்டர் ஞானசீலன் வெறும் மனுசன் இல்லே. அசலான மனுசன். ஒரு நாளைக்கு அவரை அழைச்சிட்டு வந்து உங்கள் கையிலே அறிமுகப்படுத்தி வைப்பேனுங்க!”

“உன் இஷ்டம் என் பாக்கியம்!"

"எங்கள் டாக்டர் ஜோக்கூட அடிக்கிறாங்களே?” நெஞ்சின் பாதிப்பு உதடுகளைக் கீறியது. இரத்தம் சொட்டாமலே புன்னகை செய்கிறாள், ரேவதி!

“குழலி சின்னப்பொண்ணு! உலகம் இப்ப தெரியாது. அவர் என்னைச் சந்திக்க ஒப்பவே, மாட்டார்; அதே கதை தான் இங்கேயும்; நீானும் அவரைச் சந்திக்க ஆசைப்பட மாட்டேன்; இதெல்லாம் குழலிக்கு என்ன தெரியும்...? குழலிக்குத் தெரிஞ்சு இனி என்ன ஆகப் போகுது..? இந்தக் குட்டிக்கு எதொண்ணும் தெரிய வேண்டாம். தெரியவும் கூடாது!" ரோஷம் நிரம்பிய வைராக்கியத்தின் கால்களிலேயே இப்போதும் நின்றாள், அவள்.

பொய்யாகவும் கனவாகவும் பழங்கதையாகவும் ஆக விட்ட இறந்த காலம் இறந்து சுளைகளையாக புத்த ஆண்டுகள் உருண்டு ஓடிவிடவில்லையா?