பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


எனக்குச் சொந்தமான உயிரை நானே போக்கிக் கொண்டபின் என் கழுத்துச் சங்கிலியை நீ கழற்றி எடுத்துக் கொள்."

பேசிக் கொண்டே சட்டென்று அவள் கையில் சுழன்ற கைத் துப்பாக்கியை வெகு லாவகமாகத் திருப்பித் தன் இதயத்துக்கு நேராகக் குறிவைத்தாள் டாக்டர் ரேவதி.

அதற்குள்-

"அம்...மா!"

கெட்ட கனவு கண்டு விழித்துக் கொண்ட குழலி, காரில் இருந்து இறங்கி ஓடோடி வந்தாள். கைத் துப்பாக்கியைப் பதட்டத்தோடு பறித்துக் கொண்டாள். அதை நேர்வசமாகத் தயார் நிலையில் பற்றிப் பிடித்துக் கொண்டே, முகமூடித் திருடனைக் குறிவைத்தாள்.

ரேவதி மலைத்தாள்.

குழலி கர்ச்சனை செய்தாள்: "ஏய், முத்தையா ! உன் வினை இப்ப உன்னைச் சுடுதுதானே? உனக்கு உன் உயிர் மேலே ஆசையிருந்தா, உடனே மரியாதையா ஓடிப்போயிடு. ஞானசீலன் அண்ணன் திரும்பினதும் உன்னோடு பேசிக்கிடுவேன்!’’

அடபாவமே! ‘முகமூடி' எங்கே ஒடுகிறதாம்? பரிதாபம்!

"அட பாவமே! இந்த முகமூடி ஆசாமி அல்சர் நோயாளி முத்தையன் தானே?...இவனுக்கு வயிற்று வலிக்கு வைத்தியம் செய்ததே நான் தானே!" என்று அனுதாபம் மேலிடச் சொன்னாள் டாக்டர் ரேவதி.


"அது எனக்குத் தெரியுமுங்க, டாக்டர்" என்றாள் , குழலி.

"உன் ஞானசீலன் அண்ணனுக்கு இந்த முத்தையனைத் தெரியுமா?’’