பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


ஆயா அங்கம்மா வந்து நின்றாள். "உங்களுக்கும் விருந்தாடிப் பெண்ணுக்கும் இலை போடட்டுங்களா? மத்தியானம்கூட நீங்கள் சாப்பிடலையே?" என்றாள்,

"சரி, சரி” என்று சுவையற்றுத் தலையை ஆட்டி விட்டுக் குழலியை நோக்கிப் பார்வையைத் திருப்பினாள், ரேவதி.

குழலி, நீயும் என் மாதிரி அசைவமாகத்தான் இருக்கணும்; முட்டை ஆம்லெட் பிடிக்கும்தானே?”

அவள் பிடிக்குமென்று சொன்னது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தந்திருக்கவேண்டும். ரேவதிக்கு விருப்பமான சாப்பாட்டில் இதுவும் ஒன்று. ஆயாளுக்கு ஆணை இட்டாள்.

ராவ், நெளியாமல் கொள்ளாமல் வந்து நின்றார்.

"உங்களுக்குத் தாராளமாக எலெக்டிரிக் டிரெயின் கிடைக்கும். அவசரப்படாமல் புறப்பட்டுப் போய்ச் சேருங்க. என் சுயவரம் பற்றிய விவரங்கள், விவகாரங்களைப் பற்றி நாளைக்குக் காலம்பறப் பேசுவேன்" என்றாள், டாக்டர் ரேவதி.

ராவ் தயங்கி நின்று பேசினார்: "அம்மா, சரியா அரைமணிக்கு முந்தி மந்தாகினின்னு ஒரு பொண்ணு உங்களை டெலிபோனிலே கூப்பிட்டாங்க. அவசரமா உங்களோடு பேசனுமாம். அந்தப் பொண்ணுக்கு டெலிபோன் கிடையாதாம். மறுபடியும் அவங்களே பேசுவாங்களாம்" என்றார்.

தொலைபேசி கூவுகிறது!

மந்தாகினியாக இருப்பாளோ? அவளை நினைத்ததும், தலையை வலித்தது. ரேவதி பேசினாள். "யார் பேசறது?...ஒ.டாக்டர் இந்துமதியா! ஹாய் இந்து, எப்படிடீ இருக்கே?...என்ன, லண்டனிலிருந்து ராத்திரி