58
தான் வந்தியா?...உன் கணவர். சேட்ஜி எப்படி இருக்கார்?...அடடே பாவமே! சேட் உங்களை விலக்கி விட்டு, வேறு ஒருத்தியைக் கட்டிக்கினாரா?...ஒ...அப்படியா? புதுக்கணவரோடத்தான் வந்திருக்கியா? தேனிலவா? பாரிசிலேயே தேன்நிலவு முடிஞ்சாச்சா? ம்...கட்டாயம் வருவேன். என்னோட அன்புத் தோழி இந்துவை-திருமதி இந்து ராஜ்குமாரை-நாளைக்கு சாயந்தரமே சந்திப்பேன். குட்நைட்!"
நல்லவேளை, மந்தாகினி அழைக்காதவரை தலைவலி மிச்சம், மந்தாகினியைப் பார்த்த நேரம் தொட்டு, மனத்தை தொடுகிற மாதிரி அவள் நடந்து கொள்ளவில்லையே? அவளைப் பார்த்தால், குடும்பப்பாங்கான நல்ல பெண்ணாகவே தெரியவில்லையே? இந்த லட்சணத்தில் ஞானசீலனை இவள் எப்படி அறிந்தாளாம்?
ஒருவேளை, இந்தத் துப்பு குழலிக்குத் தெரிந்திருக்கலாமோ? அண்ணன், அண்ணன் என்று உயிரை விடுகிறாளே, இந்தக் கன்னிப் பெண்!
முட்டையின் மணமான வாசனை மூக்கைத் துளைக்கிறது.
"குழலி, எங்கள் குடும்பத்திலே இனி நீயும் சேர்த்தி, கூச்சம் இல்லாமல் நீ சாப்பிடலாம்" என்று அன்புடன் ரேவதி கூறினாள்.
"சரிங்க" என்றாள் குழலி, பேசும் விழிகள் பேசாமலே அமைதியைக் கூட்டின.
சூடான பொன்னி அரிசிச் சோறு.
கத்தரிக்காய் பொறியல்.
புதினா துகையல்.
வற்றல் குழம்பு.
பச்சைக் கொத்தமல்லி ரசம்.