61
அப்பத்தான் தெய்வமாட்டம் தன்னோட ரோஜா நிறச் செவர்லே காரிலே வந்த ஞானசீலன், பிசாசு மாதிரி வந்த அந்த ரவுடி கையிலேருந்து என் மானத்தையும் உசிரையும் காப்பாற்றினார்!
பார்த்தீங்களா, டாக்டர்! - இப்பத்தான் நினைப்பு வருது. கொஞ்ச நாழிகைக்கு முன்னாடி நாம இங்கே திரும்பிக்கிட்டு இருக்கையிலே, உங்களையே ஒரு ரவுடி மடக்கிட்டானே. நான் எந்த மூலையாம்?’’
சற்றே ஓய்ந்தாள், குழலி.
பொறிதட்டிப் போனாள், ரேவதி. மேஜையில் கிடந்த கைத்துப்பாக்கி அவள் பார்வையில் சுழன்றது.
“டாக்டர்”.
“குழலி, கதையைத் தொடரப் போறியா?” ஆமாங்க; என் கதைக்கு நாயகன் யார், சொன் லுங்க???”
“ஞானசீலன்! - அந்தப் பெயரை என்னாலே எப்படி, மறக்க முடியும்? ஊம்; கதையைச் சொல்லேன், குழலி!”
"மறுபடி சொல்றேன். இது உண்மைக் கதை. சரி, கேளுங்க; வசதிபடைச்ச எங்கள் அண்ணன் ஞானசீலனுக்கு. எங்கள் தெருவிலே பெரிய வீடு இருக்குது; ஆனால், சின்ன வீடு எதுவும் இருக்கிறதாகத் தெரியல்லே. ஆனாலும், அவர் வெகு அபூர்வமாகத்தான் அங்கே வருவார். அவர் பம்பாயிலே என்னவோ தொழில் வச்சிருக்காராம், அவர் இங்கே பட்டணத்துக்கு வந்தால், எதையோ மறக்கறதுக் கோசரம் குடியே சதம்னு கிடக்கிறாராம். கெட்ட பொம்பளைங்களின் கெட்ட சவகாசம் இருக்கிறதாவும் அழுகையும் ஆத்திரமுமாகச் சொன்னார். உடலிலே கெட்டவராக இருக்கலாம், எங்கள் அண்ணன். ஆனால், உள்ளத்தாலே அவர் ஒரு நல்ல மனிதனாகத்தான்