பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

முத்தங்கள் பரிவர்த்தனை ஆயின.

குழலி இப்போது விம்மினாள்.

"உனக்குத் தூக்கம் வருதா?"

"ஊகூம்; பொழுதுதான் விடியப் போகுதே! இனி மேல் தூக்கம் வந்துதான் என்ன புண்ணியம், அம்மா?’’

"அப்படியானால், வீடியோ போடட்டுமா? சங்கரா பரணம் பார்க்கலாமா?’’

"பார்க்கலாமே.”

சொல்லிக் கொண்டே, குழலி தலையைச் சாய்த்தாள். கொட்டாவி வந்தது; தூக்கமும் வந்து விட்டது. உறக்கத்திலும் கூட, குழலியின் பால்வழிந்த முகத்திலே, அழகு புனிதக்கோலம் ஏந்திச் சிரிக்கிறது!

ரேவதி தாவணியை எடுத்துக் குழலியின் தளிர் மேனியில் போர்த்தினாள். பிறகு சுழலும் நாற்காலியில் சுழலாமல் வந்தமர்ந்தாள். அவளது அந்தரங்க அறையிலே அவள் ஒருத்திதான் சிவராத்திரி விரதம் இருக்கிறாள்!

இப்போது, அவளது மனமும் அந்தரங்கக் கூடமாக மாறுகிறது! அந்தரங்கம் என்றால், இருட்டுத்தானோ? இருட்டின் சிரிப்பிலே, என்னென்னவோ புரியாத ராகங்களின் பின்னணியில், அவள் தனது வேடங்களைக் களைந்து வீசியெறிந்து நிர்வாணக்கோலம் தாங்கிய்வளாக அவளே இப்போது சிரிக்கத் தொடங்குகிறாள்!

“ஞானசீலன்! இப்போ நீங்கள் யார்...? நான் யார்...? விடுகதையை மறக்காமல் போட்டுக்கிட்டிருக்கிற உங்களுக்கு விடுகதைக்கு உண்டான விடையைச் சொல்லித்தர நினைப்பு வரவேண்டாமா...? சொல்லுங்க, மிஸ்டர் ஞானசீலன், சொல்லுங்க!”

ரேவதி அழுகிறாள்; அமுது கொண்டேயிருக்கிறாள்!