பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. ஒன்று...இரண்டு...


வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டாலும்கூட, எதிர்நீச்சல் போடத் தெரிந்தால் தப்பி விடுவதும், தப்பிப் பிழைத்து விடுவதும் அப்படியொன்றும் கம்பச் சித்திரம் அல்லதான்!

இப்போது-

ரேவதி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்பட்டாள். எந்தச் சோதனையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி கொள்ளும் நெஞ்சுரத்தை மீட்டுக் கொண்டவளாக, அவள் தனக்குத்தானே புன்னகை செய்து கொண்டாள். நிர்மலமான நயனங்களில் புதிய ஒளி பளிச்சிட்டது. ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த ஒவியத்தை ஒவியப் பாவையாக நின்று பார்த்தாள்.

“ஆண்டவன் உன்னை நேசிக்கிறான்!”

"மெய்தான்; ஆண்டவன் என்னை நேசிக்கவே செய்வான்; நிரபராதியான என்னை நேசிக்காமல் எப்படி இருப்பான் ஆண்டவன்? மிஸ்டர் ஞானசீலன்தான் குற்றவாளி. என்னோட வயிற்றிலே வளர்ந்த குழந்தை வயிற்றிலேயே செத்து மடிஞ்சதுக்குக் காரணமாக அமைஞ்சிட்ட அவரே தான் குற்றவாளி; அவர் பாவி!

அவரோட பாவத்துக்கு என்றைக்காகிலும் ஒரு நாள் என்கிட்டே பாவ மன்னிப்புக் கேட்டால்தான் அவர்