பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


அவளுக்கு மட்டும் பதிலுக்குப் பதில் சிரிக்கத் தெரியாதா? அவள் ரேவதி-டாக்டர் ரேவதி ஆயிற்றே!

"மிஸ்டர் ஞானசீலன்! கடைசியாகச் சொல்லி வைக்கிறேன். நம்ம ரெண்டு பேரிலே, நான்தான் நிரபராதி!... எதார்த்தமும் அதுவேதான்! ... சுத்தமான உங்கள் நெஞ்சிலே நான் ஒருத்திதான் நிரந்தரமா கொலு இருப்பேன்னு அன்னிக்கு ராத்திரி என் கையிலே நீங்கள் செஞ்சு தந்த சத்தியத்தை உங்க வாழ்க்கையின் கடைசி நாள் மட்டுக்கும் நீங்கள் நிறைவேற்றினால்தான், சத்தியமாக என்னோட ஆத்மா சாந்தி அடையுமுங்க, அத்தான்: ஆமாங்க, மிஸ்டர் ஞானசீலன்!”

அவளுக்கு இனி அழவேண்டிய அவசியம் கிடையாது தான்!

கைத்துப்பாக்கியைக் கைப்பிடியில் வசம்பார்த்து, சரி பார்த்து இடுக்கிக் கொண்டே, தன் நெஞ்சுக்கு நேராகக் குறி வைத்துத் திரும்பியவளாக, அரைக்கணம் கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகள் எண்ணத் தொடங்கின.

ஒன்று...

இரண்டு...

அ. மோ-6