பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

53

வெளியே வெயில் குறைந்து வந்தது. விளக்கேற்றுகிற நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

வீட்டுக்குள் அவள் வந்ததும், “என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? நீ வரப்போறேன்னு பட்டப்ப சொல்லலையே” என்று கேட்டாள் கங்கம்மா.

பாலுவைப் பார்த்து, “நீயும் இப்பத்தான் வரியா? ராத்திரி இங்கேயே சாப்பிட்டுடு...” என்றாள்.