பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 8 I

நர்மதா அன்று இருந்ததுபோலவே இன்றும் இருக்கிறாள். வாடாமல் வதங்கள்ல் கசங்காமல் அப்படியே புதியவளாக.

கிழவிக்குத் தான்் துணை வருவதாகச் சொல்லிக்கொண் டு சாயிராம் வெங்குலட்சுயோடு வந்து சேர்ந்தான்்.

நர்மதா அம்மாவைக்கொல்லைப்பக்கம் அழைத்துப்போய் ரச சியமாக, " அண்ணாவை அழைச்சுண்டு வரதுதானே? இவனைப்போய்த் துணைக்கு அழைச்சுண்டு வந்தியே” என்று

கேட்டான்.

'அண்ணாவா? அவன்தான்் பொண்டாட்டியோட பட்ட ண்ம் போயிட்டானே. சினிமாவுக்கு ஆள் பிடிச்சுக்கொடுக் கிறதாம். அவன் பொண்டாட்டி சினிமாவிலே நடிக்கப் போறாளாம்.'

தள்னுடைய நிலைமை நர்மதாவுக்கு நன்றாகப்புரிந் தது. தகுந்த துணை என்று சொல்லிக்கொள்ள அம்மாவைத் தவிர வேறு யாருமே இல்லை. *

சாயிராம் என்னென்னவோ கேட்டான்.

எப்பப்போனான், என்னிக்கி வருவான்? பணம் காசு குடுத்துட்டுப் போயிருக்கான? இல்லையன்ன கி ள ம் பு . அன்னிக்கே சொன்னேன். உன் லட்சண சதுக்கு இத்தனை நாள் பெரிய ஸ்டாரா ஆகியிருக்கலாம். ஹாம்...'

அவள் இதெற்கெல்லாம் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

'நீங்க இந்த வீட்டிலே இருக்கிறது சரியில்லை. ஊருக்குப் போங்க

போய்விட்டான். அம்மாவும் பெண்ணும் சமைத்தார்கள். சாப்பிட்டார்கள், பேசினார்கள். அவள் தினமும் அவனைப் பற்றி ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ---

பட்டப்பா அன்று கிளம்பியவன் நேராக வாரணாசிக்குப் போனான். மனம்போனபடி சுற்றித் திரிந்தான்். அவனைப் போல அங்கு எத்தனைபேர்? மன சாந்தியைத்தேடி, கங்கா ஸ்ஞனம் பண்ணுவதற்கு, மூதாதையர்களுக்கு சிரார்த்தம் பண்ண, வாழ்க்கையை வெறுத்தவர்கள், ஊரில் வீடு வாசல் மனைவி குழந்தைகள் இருந்தும் ஏதோ ஒரு பிரமை தங்களைப்