பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


பச்சைக்கிளி பாடுது! பக்கம் வந்தே ஆடுது!
இங்கே பாரு!
உன் துன்பம் பறந்தோடுது- (பச்சை)
கள்ளம் அறியாதது! ரொம்ப சாது!
வேறெங்கும் ஓடாது!
உன் சொல்லைத் தள்ளாது- (பச்சை)
உன்னைக் காணா விட்டால் உயிர் வாடும்!
கண்டால் இன்பம் கூடும்!
சந்தோஷங் கொண்டாடும்! (பச்சை)
காதல் கதை சொல்லவோ மனம் கூசும்!
கண்ணால் அதைப் பேசும்!
அன்பால் வலைவீசும்- (பச்சை)
அமரதீபம்-1956
இசை : சலபதிராவ்
பாடியவர்: ஜிக்கி