பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103


பெண் : படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா!
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா!
ஆண் : பார்வை சொல்லும் பாடம் கண்டு விழிக்கிறேனம்மா!
படிப்ப தெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா?
(படிக்க)
பெண் : கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு-நாம்
எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு?
ஆண் : ஒட்டும் இரு உள்ளந் தன்னில் பற்றிக்கொண்டது-அந்த
புத்தம்புது நெருப்பைத் தானே காதலென்பது! கவிஞர் சொன்னது!
(படிக்க)
பெண் : தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே
செங்கதிரோனைச் சுற்றும் சேதி பழைய பாடமே!
ஆண் : என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இந்த உலகமே-இன்று
உன்னைச் சுற்றிக்கேட்கும் பாடம் புதிய பாடமே-புதிய பாடமே!
(படிக்க)
ஆண் : படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா!