பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115


என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்!
ஏதும் தோன்றாமல் தடுமாறுகின்றேன்!
காணாத நிலையே கண்டதனாலே
கங்கு கரையின்றிப் பொங்கு கடல் போலே ஆனேனே!
இது கனவோ? அன்றி நனவோ?
என தன்பே! நீ சொல்லாயோ?  (என்)


இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல்வாழ்விலே
தேவைதனை உணர்ந்தே
சேவை செய்து மகிழ்வேன்
சிறந்த இன்பம் காணுவேன்!


உறவாடும் காதல் சுகம் வரும் போது
உனை மறந்தாலே அதிசயம் ஏது? கிடையாது!
இது கனவோ அன்றி நனவோ?
எனதன்பே ! நீ சொல்லாயோ?
தங்கப் பதுமை-1958
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா