பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118


பெண் : காவேரிதான் சிங்காரி!
சிங்காரிதான் காவேரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக்
காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க
பக்கத்திலே வந்திருக்கும் வம்புக்காரி!
ஆண் : ஆஹா! சிங்காரிதான் காவேரி!
காவேரிதான் சிங்காரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
தங்கம் போல மனமுடைய பணக்காரி! நல்ல
தான தர்ம சிந்தனையுள்ள உபகாரி!
தந்திரத்திலே சிறந்த குள்ளநரி! என்னை
மந்திரத்தால் மயக்கிய கைகாரி!
பெண் : குணத்துக்கு அடிமை! பணத்துக்கு எதிரி!
கொஞ்சிப் பாடிவரும் காவேரி!
ஆண் : குறும்புக்காரியே! உனது கரும்புப் பார்வைதான்
என்றும் என் வாழ்விலே எனக்கதிகாரி!
பெண் : இனிக்கும் பேச்சிலே மனசும் மயங்கியே
ஏங்கி வாடுபவள் சிங்காரி!