பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122


பொங்கும் அழகு பூத்துக் குலுங்கும்
தங்கத் தாமரையே!
அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும்
இன்பக் காவிரியே! - (பொ)


இன்று நேற்று வந்த உறவா
இங்கு நம் உறவே!
இதயத்தோடு இதயமாகக்
கலந்த பெண் உருவே!


சங்கத் தமிழ்க் கன்னியாக
அன்று நீ பிறந்தாய்!
கம்பனாகத் தோன்றி யுன்னைக்
கலந்து நான் மகிழ்ந்தேன்!


இந்த உலகம் உள்ள வரையில்
சொந்தம் மாறாது!
எது வந்தாலும் எந்த நாளும்
பிரிவும் நேராது!
தங்கம் மனசு தங்கம்-1959
இசை : கே. வி. மகாதேவன்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்