பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124


உன் முகம் தான் என் முகத்தைக் காட்டும் கண்ணாடி - இதை
உணர்ந்து நீயும் சிரிக்க வேணும் எனக்கு முன்னாடி!


நீ எண்ணுவதை உன் கண்ணிரண்டும்
சொல்லாமல் சொல்லுதே-அதை
எண்ணி எண்ணி இங்கு என் மனமும்
துள்ளாமல் துள்ளுதே!
என்னை எங்கோ அழைத்துச் செல்லுதே
(உன் முகம்)


உள்ளத்தினால் இங்கு ஒன்று பட்டால்
உருவாகும் நன்மையே-ஒரு
கள்ளமில்லா இன்பம் தேடிவரும்
எந்நாளும் நம்மையே!
அன்பு ஒன்றே உலகில் உண்மையே
(உன் முகம்)
பெண் மனம்-1963
இசை: வேதா