பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127


பெண் : கம கம வென நறுமலர் மணம் வீசுதே!
ஆண் : நம் திருமண முதல் இரவென அது பேசுதே!  (கம)
பெண் : ஜிலு ஜிலுவெனத் தென்றல் உடலைத் தழுவுதே!
ஆண் : தன் நிலை மறந்து மனமும் எங்கோ நழுவுதே!
பெண் : கலை மதியும் வானுடன் விளையாடுதே!
ஆண் : என் கண்ணும் கருத்தும் உன் அழகில் ஆடுதே!
பெண் : குறு குறு வென இரு விழி என்னைப் பார்க்குதே!
ஆண் : அது கொஞ்சிப் பேசி மகிழ்ந்திடவே அழைக்குதே!
பெண் : இதய நாடி பட பட வெனத் துடிக்குதே!
ஆண் : ஒரு இனமறியா புது உணர்வு பிறக்குதே!
பெண் : உள்ளக் கருத்தை உமது முகம் காட்டுதே!
ஆண் : உன் சொல்லும் செயலும் நெஞ்சில் இன்பமூட்டுதே! (கம)


சமய சஞ்சீவி.-1957
இசை : G. ராமநாதன்