பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128


முத்த : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு
பிறந்திட வேணும்!-அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம்
அடைந்திட வேணும்!


முருகன் : செல்லக் கிளி மழலை மொழி
சிந்திட வேணும்!-நாம்
செவியாற அதைக் கேட்டு
மகிழ்ந்திட வேணும்!


முத்த : கள்ள மில்லா அன்பை
கன்னித் தமிழ் பண்பை
முருகன் : கலந்துணவாய் நாமதற்கு
ஊட்டிட வேணும்!


இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு
பிறந்திட வேணும்!-அதை
அள்ளிக்கையால் அணைத்து
இன்பம் அடைந்திட வேணும்!


முருகன் : தெள்ளு தமிழ்க்கலைகளிலே
தேர்ந்திட வேணும்!-பொது
சேவையிலே முன்னணியில்
திகழ்ந்திட வேணும்!