இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
166
- கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
- கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே!
- சொல்லுமின்றி மொழியுமின்றி மெளனமாகப் படித்தாள்!
- உள்ளமதைக் குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள்!
- துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றித் தவித்தாள்!
- கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத்துடித்தாள்!
- (கள்ள)
- அன்புக் கைகள் அணைப்பிலே ஆசை தீரும் பொன்னாள்!
- இன்ப மென்னும் உலகினிலே இணைந்து வாழும் நன்னாள்!
- என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள்!
- என்று எண்ணி ஏங்குகிறாள் அன்னநடைப் பெண்ணாள்!
- (கள்ள)
குலமகள் ராதை-1963
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : P. சுசிலா