பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173


பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே!
ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!
ஆண் : காதலே கனவு என்னும்
கவிதை தன்னை வாழ்நாளில்!
ஓர் முறை பாடியே
உறங்கிடுவேன் உன்மடியில்!
ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!
பெண் : எந்தனுயிர்க் காதலரை
இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே
காத்திருப்பாய் ஒரு கணமே!
ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே?
மல்லிகா-1957
இசை : T. R. பாப்பா
பாடியவர் : A. M. ராஜா 8 P. சுசீலா