பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176


எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே!
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
(எந்)
கண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும் நீ நிறைந்தாய்!
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்!
உன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே!
எனை மீறி நிலைமாறி சல்லாப கானம் பாடுதே!
(எந்)
உன்முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை!
ஊரெல்லாம் ஒய்ந்த போதும் நீ உறங்கி ஒய்வதில்லை!
மண்மீது நீ இல்லாது வாழும் ஜீவன் இல்லையே!
மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே!
(எந்)
விடிவெள்ளி-1960
இசை : A. M. ராஜா.