பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177


பெண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை!
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை!
ஆண் : பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூப்பட்டுப் பட்டு மணக்கும்!
பெண் : செந்தமிழ் நாட்டுச் சிலையாட்டம் தித்திக்கும்!
ஆண் : சிட்டே சிட்டே வா வா!
ஜில்லென்று கிட்டே நீவா!
நகையும் சுவையும் பசியும் உணவும் நாமாகலாம்!
பெண் : சிரிப்பூட்டும் ராஜா!
தேனூறும் இந்த ரோஜா!
கிடைக்காது! நினைக்காதே
ரொம்ப லேசா!
ஆண் : சின்னச் சின்ன பாப்பா!
சிங்காரக் கண்ணு பாப்பா!
சிலையே மலையே உன் மேலாசை
கொண்டால் தப்பா?