பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182


தாவி வரும் காவிரியின் சோலையோரம்!
பூவிரிய வண்டுபாடும் காலை நேரம்!
ஆவலுடன் பறவையினம் ஆரவாரம்-செய்து
காவினிலே இரை தேட வெளி யேறும்!
நாவினிக்க உண்பதற்குக் காய்கனிகள்!
நஞ்சைகளில் தங்கநிற நெல்மணிகள்!
மேவி நிற்கும் காட்சியின்பம் காணும் விழிகள்!
வேறெதையும் விரும்புமோ இந்த உலகில்?
வான்மழையின் வளம் தோன்றும் வயல்களிலே!-கலை
வாணர்களின் திறம் தோன்றும் கோயில்களிலே!
மாறாத குளுமை தோன்றும் தென்றல்தனிலே! என்
மாதரசி மேனி தோன்றும் மாந்தளிரிலே!
பெரியகோயில்-1958


இசை: K.V. மகாதேவன்