இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
182
- தாவி வரும் காவிரியின் சோலையோரம்!
- பூவிரிய வண்டுபாடும் காலை நேரம்!
- ஆவலுடன் பறவையினம் ஆரவாரம்-செய்து
- காவினிலே இரை தேட வெளி யேறும்!
- நாவினிக்க உண்பதற்குக் காய்கனிகள்!
- நஞ்சைகளில் தங்கநிற நெல்மணிகள்!
- மேவி நிற்கும் காட்சியின்பம் காணும் விழிகள்!
- வேறெதையும் விரும்புமோ இந்த உலகில்?
- வான்மழையின் வளம் தோன்றும் வயல்களிலே!-கலை
- வாணர்களின் திறம் தோன்றும் கோயில்களிலே!
- மாறாத குளுமை தோன்றும் தென்றல்தனிலே! என்
- மாதரசி மேனி தோன்றும் மாந்தளிரிலே!
பெரியகோயில்-1958
- இசை: K.V. மகாதேவன்