பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183


பெண் : வான் மழையின்றி வாடிடும் பயிர்போல்
நானுன்னைப் பிரிந்தே வாடுகின்றேன்!
சூழ் நிலையாலே கூண்டினில் வாழும்
பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்!
வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே
கெடுமதியால் எனைப் பூட்டினரே... .... ...
வளர் காதல் ஜோதி உனையின்றி பாரில்
ஒளியுமே ஏதென் வாழ்விலே?
ஆண் : காதல்மொழி பாவாய்! கனவோ நம் வாழ்வு-ஓ!
கணமும் இனி உயிர் நான் தரியேன்
நாதம் இல்லாத யாழ் போலும் ஆனேன்
நானே உன் பிரிவால் வாடியே!
பெண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ? என் அமுதே!
ஆண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்
முன் போலவே நாம் சேர்ந்திடுவோமோ! என் அமுதே!