இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
183
- பெண் : வான் மழையின்றி வாடிடும் பயிர்போல்
- நானுன்னைப் பிரிந்தே வாடுகின்றேன்!
- சூழ் நிலையாலே கூண்டினில் வாழும்
- பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்!
- வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே
- கெடுமதியால் எனைப் பூட்டினரே... .... ...
- வளர் காதல் ஜோதி உனையின்றி பாரில்
- ஒளியுமே ஏதென் வாழ்விலே?
- ஆண் : காதல்மொழி பாவாய்! கனவோ நம் வாழ்வு-ஓ!
- கணமும் இனி உயிர் நான் தரியேன்
- நாதம் இல்லாத யாழ் போலும் ஆனேன்
- நானே உன் பிரிவால் வாடியே!
- பெண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்
- முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ? என் அமுதே!
- ஆண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்
- முன் போலவே நாம் சேர்ந்திடுவோமோ! என் அமுதே!