இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
197
தொகையறா
- ஆண் : மந்தரையின் போதனையால் மனம் மாறிகைகேயி
- மஞ்சள் குங்குமம் இழந்தாள்!
- வஞ்சகச் சகுனியின் சேர்க்கையால் கெளரவர்கள்
- பஞ்ச பாண்டவரை பகைத்தழிந்தார்!
- சிந்தனையில் இதையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல்
- மனிதரெல்லாம் மந்தமதியால் அறிவு மயங்கி
- மனம் போன படி நடக்கலாமா?
(பாட்டு)
- கோரஸ் : ஒற்றுமையாய் வாழ்வதாலே
- உண்டு நன்மையே!
- வேற்றுமையை வளர்ப்பதனாலே
- விளையும் தீமையே!(ஒற்)
- உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாடமே
- அணையாத தீபமாய்ச் சுடர் என்றும் வீசுமே
- ஆண் : நெஞ்சில்-உண்டான அன்பையே
- துண்டாடி வம்பையே
- உறவாகத் தந்திடும்
- சிலர் சொல்லை நம்பியே
- இருவரும் : வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
- கோரஸ் : ஒற்றுமையாய் !!