பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201


மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று
மிதியாமை கோடி பெறும் என்ற
மதி சொன்ன ஒளவை மொழி தன்னைப் போற்றி
வாழ்வதே பெருமை தரும்!
மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
என்றெண்ணும் குணம் வேணும்-இதை
மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
மாறாத அவமானம்!(மண்)
கண்ணான கணவன் தன்மானம் தன்னைக்
காப்பாற்றும் பெண் தெய்வம்-மனம்
புண்ணாகிச் சிந்தும் கண்ணீரைக் காணப்
பொறுக்காதடா தெய்வம்!
எண்ணாத இன்பம் எது வந்த போதும்
எதிர் கொள்ளத் தயங்காதே!
எளியோருக்காக நீ செய்த த்யாகம்
இதை லோகம் மறவாதே!(மண்)
அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணங் காசிலே இல்லை-மெய்
அன்பே எந்நாளும் அழியாத இன்பம்
அதற்கீடு வேறில்லை!
சதாரம்-1956
இசை : G. ராமநாதன்
பாடியவர் : திருச்சி லோகநாதன்

மருத-12