இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
201
- மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று
- மிதியாமை கோடி பெறும் என்ற
- மதி சொன்ன ஒளவை மொழி தன்னைப் போற்றி
- வாழ்வதே பெருமை தரும்!
- மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
- என்றெண்ணும் குணம் வேணும்-இதை
- மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்
- மாறாத அவமானம்!(மண்)
- கண்ணான கணவன் தன்மானம் தன்னைக்
- காப்பாற்றும் பெண் தெய்வம்-மனம்
- புண்ணாகிச் சிந்தும் கண்ணீரைக் காணப்
- பொறுக்காதடா தெய்வம்!
- எண்ணாத இன்பம் எது வந்த போதும்
- எதிர் கொள்ளத் தயங்காதே!
- எளியோருக்காக நீ செய்த த்யாகம்
- இதை லோகம் மறவாதே!(மண்)
- அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
- பணங் காசிலே இல்லை-மெய்
- அன்பே எந்நாளும் அழியாத இன்பம்
- அதற்கீடு வேறில்லை!
சதாரம்-1956
- இசை : G. ராமநாதன்
- பாடியவர் : திருச்சி லோகநாதன்
மருத-12