பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204


மண்ணிலே பொன் கிடைக்கும்!
மரத்திலே கனி கிடைக்கும்!
எண்ணத்திலே தாழ்ந்துவிட்ட மனிதர்களால்-இந்த
உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்!
சின்னஞ்சிறு சிப்பிகூட முத்து தரும்!-கொட்டும்
தேனீக்கள் சுவை மிகுந்த தேனைத்தரும்!
செங்கரும்பு உருவிழந்தும் சாறு தரும்!-தான்
செத்த பின்னும் யானை கூடத் தந்தம் தரும்!
எண்ணத்திலே தாழ்ந்து விட்ட மனிதர்களால்-இந்த
உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்!
மனிதராகப் பிறந்ததினால் மனிதரில்லை-பெரும்
மாளிகையில் வசிப்பதனால் உயர்வுமில்லை!
குணத்தால் சிறந்தவரே உயர்ந்தவராம்-அந்தக்
கொள்கையுள்ள நல்லவரே மனிதர்களாம்!
நல்லவன் வாழ்வான்-1961


இசை : T. R. பாப்பா