பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207


இது தான் உலகமடா!-மனிதா
இது தான் உலகமடா!-பொருள்
இருந்தால் வந்து கூடும்-அதை
இழந்தால் விலகி ஒடும்!


உதைத்தவன் காலை முத்தமிடும்!
உத்தமர் வாழ்வைக் கொத்தி விடும்!
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்து விடும்!
பொருள்-இருந்தால் வந்து கூடும்!
அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)


உழைப்பவன் கையில் ஓடு தரும்!
உணவுக்குப் பதிலாய் நஞ்சைத் தரும்!
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித் தரும்!
பொருள்-இருந்தால் வந்து கூடும்!
அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)