இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
213
(தொகையறா)
- உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்!
- உயர் பதவி காணுகின்றார்!
- உண்மையே பேசிடும் உத்தமர்கள் ஓயாத
- துயராலே வாடுகின்றார்!
பாட்டு
- புவி மீதினில் நீதி புகைந்ததே!
- பொய், பாபமும், சூதும் மலிந்ததே!
- பணப்பேயதன் முன்னே சட்டமெல்லாம்
- பணிந்தாடுதே இன்று பாரினிலே!
- கனல் மீதினில் புழுவாய் ஏழைகளே!
- கண்கலங்கியே வாடித் திண்டாடுறார்!
- அநியாயமிதே! அழியாததேன்?
- இதை அழித்திடுவாரே இல்லையா?
- பொதுமேடையில் ஏறிப் பேசுகிறார்-தாம்
- பொதுநலத் தொண்டன் என்கிறார்
- அதிகாரமும் கையில் வந்தவுடன்
- அநியாயமும் செய்கின்றார் கண்மூடியாய்!
- மனத்தூய்மையுடன் எல்லோருமே
- வாழ்ந்தால் அன்றி நிலையும் மாறுமோ?
- பாபமும் சூதும் மலிந்ததே!
- பாபம் மலிந்ததே! மலிந்ததே!
ராஜாம்பாள்-1951’'
- இசை: ஞானமணி