பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218


:பெண்கள்: ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே-நம்மால்

ஆகாததில்லையென்று பாடுவோமே-நாம்
அழியாத புகழ் தன்னைத் தேடுவோமே-கற்பை
அணியாக நாம் என்றும் சூடுவோமே-என்றும்
(ஆனந்தமாய்)


கண்ணகியின் மரபில் வந்த
கன்னியர்கள் என்பதை நாம்
எண்ணி எண்ணி இன்பம் கொள்வோமே!-பெண் குலத்தின்
பெருமை தன்னை எடுத்துச் சொல்வோமே!
கற்பெனும் தீயால்-பெரும்
அற்புதம் செய்தாள்-அந்தப்
பொற்கொடிபோல் வாழ்ந்திடுவோமே!-என்றும்
(ஆனந்தமாய்)


ஆஹா...
அனுசூயை எனும் ஒரு பெண்ணாள்-அணையாத
கற்பென்னும் சுடர் வீசும் கண்ணாள்!
சிவனோடு ப்ரம்மாவை திருமாலை முன்னாள்
சிசுக்களாக்கி அமுதம் அளித்த பெருமை சொல்வோமே-என்றும்
(ஆனந்தமாய்)